கொரோனா காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் திறக்கப்பட்டன. இதனிடையே, கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா, ஒமைக்ரான் பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளை பொறுத்தவரை பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு, 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மற்ற வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. பொதுத்தேர்வு, கொரோனா தடுப்பூசி செலுத்துவது போன்ற காரணங்களுக்காக அவர்களுக்கு பள்ளிகள் நடைபெறுவதாக தமிழக அரசு தெரிவித்தது.

இருப்பினும், தொற்று பரவல் அதிகரித்து வந்த காரணத்தால், பல்வேறு தரப்பினரிடத்திலும் இருந்து வந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அதாவது, 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு ஊரடங்கு ரத்தா? முதல்வர் எடுக்கும் முக்கிய முடிவு!

இந்த விடுமுறையானது நீட்டிக்கப்படுமா அல்லது பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்து வருவதற்கிடையே, மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை தொடங்கி நேரடி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு உள்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர். பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் தெரிவித்திருந்தார்.

அதில், வருகிற பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக, பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்த நிலையில், தற்போது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், “1 முதல் 12ஆம் வகுப்பு பள்ளிகளை திறக்க அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி அளித்தால் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும். மே முதல் வாரத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெறும்.” என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons