சினிமா
Login
அரசியல்
ஆரோக்கியம்
மருத்துவம்
-
“சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்”.. 8ம் தேதி தமிழகம் முழுதும் லட்சம் இடங்களில் நடக்கிறது.அரசு அதிரடி!
தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு வரும் 8ம் தேதி, லட்சம் இடங்களில் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2 வருடமாக பீடித்து கொண்டிருந்த கொரோனாவைரஸ் தொற்று மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
இதற்கு ஒரே காரணம் மத்திய அரசு மேற்கொண்ட அனைத்துவிதமான நடவடிக்கைகள்தான்.. அந்த வகையில், நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் ஆண்கள் 25, பெண்கள் 33 என மொத்தம் 58 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்..
அதிகபட்சமாக சென்னையில் 28 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,153 ஆக அதிகரித்துள்ளது.. இதுவரை 34 லட்சத்து 15,662 பேர் குணமடைந்துள்ளனர்… நேற்று மட்டும் 59 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்… தமிழகம் முழுவதும் 466 பேர் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர்… நேற்றுகூட உயிரிழப்பு ஏதும் இல்லை…
அதேசமயம், 4ம் அலை பரவாமல் தடுக்கும் வகையில், தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது… அதன்படி வரும் 8ம் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களில் நடைபெற உள்ளது.. அதாவது, 2-வது டோஸ் செலுத்தாதவர்களுக்கு முக்கியதுவம் தரும் வகையில் இந்த சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் சொன்னதாவது:
தமிழகத்தில் 1.50 கோடி பேர் 2ம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். இதனால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து தடுப்பூசி போடும் வகையில், கிராம வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டு, பொது சுகாதாரத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், தடுப்பூசி போடாதவர்களின் பெயர், மொபைல் எண், தடுப்பூசியின் பெயர், முதல் டோஸ் போட்ட நாள், இரண்டாம் டோஸ் போட வேண்டிய நாள், முதல் டோஸ் போட்டு எத்தனை நாட்கள் ஆகியுள்ளன போன்ற விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கொண்டு கிராம வாரியாக தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும். தேவைப்பட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்படும். அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடுத்த அலை வருவதில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
செய்தி
-
ஆவின் பால் விலை உயர்த்தப்படாது: அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்
சென்னையில் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
“தமிழ்நாட்டில் பால் விலையை இப்போதைக்கு உயர்த்துவதற்கு எந்த முயற்சிகளிலும் நாங்கள் ஈடுபடவில்லை. ஆவின் பால் விலை உயர்த்தப்படும் என்பது கற்பனை. இதுகுறித்து தவறான செய்தி பரவி வருகிறது. சந்தையில் உள்ள பல்வேறு நிறுவன பாலுடன் ஒப்பிடும் போது ஆவின் பாலின் விலை குறைவு.
சந்தையில் தனியார் நிறுவன நெய் ரூ.1000 வரை விற்கப்படுகிறது. ஆனால் ஆவின் நெய் ரூ.700க்கு விற்கப்படுகிறது. ஆவின் பொருட்களின் அளவிலும் தரத்திலும் எந்த சமரசமும் நாங்கள் செய்யவில்லை. புகார்களை ஆய்வுசெய்து சரிசெய்து வருகிறோம்.
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டிய தேவை உள்ளது. இதுகுறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசி முடிவெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
கல்வி
கள்ளக்குறிச்சி சக்தி பள்ளிக் கலவரம் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி ஓரிரு நாட்களில் தீர்வுகாண பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்
கள்ளக்குறிச்சி சக்தி பள்ளிக் கலவரம் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி ஓரிரு நாட்களில் தீர்வுகாண பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்ன சேலம் சக்தி தனியார் பள்ளியில் நடைபெற்ற கலவரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.இது...
தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது
தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6ந் தேதியும் தொடங்கின. கோடை வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதி வருகிறார்கள். தமிழ் மொழிப் பாடத்தேர்வு நடந்து...
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது..!
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள்,...
தமிழகம் முழுவதும் பிளஸ்- 2 பொதுத்தேர்வு தொடங்கியது!
தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. மொத்தம் 3,119 மையங்களில் நடைபெற்று வரும் இந்தத் தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து...
10-ம் வகுப்பு வினாத் தாள்கள் ஆந்திராவில் 2-வது நாளாக கசிவு
ஆந்திராவில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தெலுங்கு மற்றும் ஹிந்தி தேர்வுகளின் வினாத் தாள்கள் கசிந்ததால் கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. முதல்...