தேசிய செய்திகள்
அரசியல்
TRENDING VIDEO
Login
அரசியல்
ஆரோக்கியம்
மருத்துவம்
“சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்”.. 8ம் தேதி தமிழகம் முழுதும் லட்சம் இடங்களில் நடக்கிறது.அரசு அதிரடி!
தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு வரும் 8ம் தேதி, லட்சம் இடங்களில் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2 வருடமாக பீடித்து கொண்டிருந்த கொரோனாவைரஸ் தொற்று மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
இதற்கு ஒரே காரணம் மத்திய அரசு மேற்கொண்ட அனைத்துவிதமான நடவடிக்கைகள்தான்.. அந்த வகையில், நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் ஆண்கள் 25, பெண்கள் 33 என மொத்தம் 58 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்..
அதிகபட்சமாக சென்னையில் 28 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,153 ஆக அதிகரித்துள்ளது.. இதுவரை 34 லட்சத்து 15,662 பேர் குணமடைந்துள்ளனர்… நேற்று மட்டும் 59 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்… தமிழகம் முழுவதும் 466 பேர் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர்… நேற்றுகூட உயிரிழப்பு ஏதும் இல்லை…
அதேசமயம், 4ம் அலை பரவாமல் தடுக்கும் வகையில், தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது… அதன்படி வரும் 8ம் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களில் நடைபெற உள்ளது.. அதாவது, 2-வது டோஸ் செலுத்தாதவர்களுக்கு முக்கியதுவம் தரும் வகையில் இந்த சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் சொன்னதாவது:
தமிழகத்தில் 1.50 கோடி பேர் 2ம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். இதனால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து தடுப்பூசி போடும் வகையில், கிராம வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டு, பொது சுகாதாரத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், தடுப்பூசி போடாதவர்களின் பெயர், மொபைல் எண், தடுப்பூசியின் பெயர், முதல் டோஸ் போட்ட நாள், இரண்டாம் டோஸ் போட வேண்டிய நாள், முதல் டோஸ் போட்டு எத்தனை நாட்கள் ஆகியுள்ளன போன்ற விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கொண்டு கிராம வாரியாக தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும். தேவைப்பட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்படும். அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடுத்த அலை வருவதில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
செய்தி
அதிமுக கொடி, சின்னம் வழக்கு! பாயிண்டை பிடித்த ஓபிஎஸ்! தடை நீக்கப்படுமா? தீர்ப்புக்கு நாள் குறித்த ஐகோர்ட்.!
அதிமுக கொடி, சின்னம் வழக்கு! பாயிண்டை பிடித்த ஓபிஎஸ்! தடை நீக்கப்படுமா? தீர்ப்புக்கு நாள் குறித்த ஐகோர்ட்.!
அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க கோரி அக்கட்சியின் பொதுச்செயலவாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் திங்கள்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், மனு மீதான விசாரணை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன், அப்துல் சலீம் ஆகியோர் ஆஜராகி தங்களுடைய வாதங்களை முன் வைத்தனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான இடைக்காலக் கோரிக்கையைத் தான் உச்ச நீதிமன்றம் நிராகரித்ததாகவும், நிலுவையில் உள்ள பிரதான வழக்கை தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினர். பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதாகவும், ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் தான் கட்சியிலிருந்து சிலரை நீக்கியதாகவும், அதற்குத் தனக்கு உரிமை உள்ளதாகவும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், எதிர்க்கட்சிகளை வீழ்த்துவதற்காகக் கட்சி ஒன்றாக இருக்க வேண்டுமென்றே விரும்புவதாகவும், அதற்குத் தொண்டர்களைச் சந்திப்பதற்கான சுதந்திரம் தனக்கு வேண்டுமெனவும் ஓபிஎஸ் சார்பில் வாதிடப்பட்டது. கட்சியின் சின்னம், கொடியைப் பயன்படுத்தத் தங்களுக்குத் தடை விதிக்கப்பட்டால் தேர்தல் ஆணையத்தை நாட முடியாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் வழக்கு எதுவும் நிலுவையில் உள்ளதா? என கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகப் ஓபிஎஸ் சார்பில் பதிலளிக்கப்பட்டது.
பின்னர், இபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் இடைக்காலக் கோரிக்கையை நிராகரிக்கும் போது பிரதான வழக்கைத் தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடுவது வழக்கமான நடைமுறை தான். ஓபிஎஸ் நீக்கப்பட்டது தவறு என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் தன்னை அழைத்துக்கொள்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என அழைப்பதைத் தான் எதிர்ப்பதாகவும் வேண்டுமானால் வேறு கட்சி தொடங்கி ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் அழைத்துக்கொள்ளட்டும் என இபிஎஸ் சார்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து, அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு வரும் திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
கல்வி
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்- 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சென்னையில் வியாழக்கிழமை பதற்றம் நிலவியது. மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு விரைந்தனர். இதனால் பள்ளிகளின் வாயிற்பகுதியில் ஏராளமானோர் குவிந்திருப்பதைக்...
கள்ளக்குறிச்சி சக்தி பள்ளிக் கலவரம் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி ஓரிரு நாட்களில் தீர்வுகாண பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்
கள்ளக்குறிச்சி சக்தி பள்ளிக் கலவரம் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி ஓரிரு நாட்களில் தீர்வுகாண பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்ன சேலம் சக்தி தனியார் பள்ளியில் நடைபெற்ற கலவரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.இது...
தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது
தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6ந் தேதியும் தொடங்கின. கோடை வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதி வருகிறார்கள். தமிழ் மொழிப் பாடத்தேர்வு நடந்து...
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது..!
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள்,...
தமிழகம் முழுவதும் பிளஸ்- 2 பொதுத்தேர்வு தொடங்கியது!
தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. மொத்தம் 3,119 மையங்களில் நடைபெற்று வரும் இந்தத் தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து...