நெல்லை மாவட்டம் திசையன்விளையில் நெல்லை பாராளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாடு இன்று நடக்கிறது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொள்கிறார்

இந்நிலையில் நேற்று காங்கிரஸ் நிர்வாகிகள் வாட்ஸ்-அப் குரூப்பில் நாங்குநேரி காங்கிரஸ் நிர்வாகி அம்புரோஸ் என்பவர் திசையன்விளை கூட்டத்திற்கு கே.எஸ். அழகிரி வரும்போது வெடிகுண்டு வெடிக்கும் என்று பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நாங்குநேரி வட்டார காங்கிரஸ் தலைவர் முத்துகிருஷ்ணன் என்பவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் உள்வாய் சாத்தான்குளத்தை சேர்ந்த நிர்வாகி அம்புரோஸ் என்பவர் மீது மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons