தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை பட்டாசுகள் வெடித்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளியையொட்டி சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கும் ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சிறப்பு பஸ்கள், கார்கள் மூலம் சென்றனர்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை இன்று முடிந்த நிலையில் சென்னையை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் படையெடுத்து வருகின்றனர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் கார்கள், பஸ்கள் மூலம் சென்னை திரும்புவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, 3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. மதுராந்தகத்தில் உள்ள ஆத்தூர் சுங்கச் சாவடியில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறந்து, போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதைப்போல உளுந்தூர்பேட்டை டோல்கேட்டை கடந்து நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கி அணிவகுத்து செல்கின்றன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons