வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் (டிச.,3) புயலாக வருவாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், வரும் 4ம் தேதி வரை தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், 4ம் தேதி சென்னை மற்றும் ஆந்திராவின் மசூலிப்பட்டினத்திற்கு இடையே புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் அறிவித்து உள்ளது.