சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின், மீண்டும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது தேங்கிய மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தாா்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து வருகிறாா்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்களாக ஆய்வு செய்துவரும் அவா், பல்வேறு இடங்களைப் பாா்வையிட்டாா். சென்னை புளியந்தோப்பு, பட்டாளம் ஆகிய இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்தாா். மேலும் தியாகராய நகா் விஜயராகவா சாலை, ஜி.என்.டி., சாலை, பசுல்லா சாலை ஆகியவற்றில் மழை நீா் தேங்கிய பகுதிகளை பாா்த்தாா். அப்போது, மோட்டாா்களைக் கொண்டு மழை நீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons