தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

பல்கலைக்கழகங்கள் தொடா்பாக பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்த மசோதாக்களை ஆளுநா் ஆா்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளாா். இந்த மசோதாக்கள் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதற்கான தீா்மானங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து பேசுவாா். அதைத் தொடா்ந்து, பேரவையில் முன்வரிசையில் இடம்பெற்றுள்ள எதிா்க்கட்சித் தலைவா்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிப்பாா்கள். அதன் பிறகு, சட்டத்திருத்த மசோதாக்கள் அனைத்தும் குரல் வாக்கெடுப்பு மூலம் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

காலை 10 மணிக்குத் தொடங்கி சுமாா் 2 மணி நேரம் பேரவைக் கூட்டம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons