சேலம் மாநகராட்சி தேர்தலில் 18&வது கோட்டத்தில் தே.மு.தி.க. சார்பில் திருநங்கை ராதிகா என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து திருநங்கைகள் கடந்த சில நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மெய்யனூர் அரசு பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்ய அந்த பகுதியை சேர்ந்த திருநங்கைகள் ஒன்று திரண்டு வந்தனர். மேலும் திருநங்கைகளுக்கு வாக்குரிமை வழங்கி அதனை நிறைவேற்றிய அரசுக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

தங்கள் சமுதாயத்தின் சார்பில் போட்டியிடும் திருநங்கையை வெற்றி பெறச் செய்வதே தங்களின் நோக்கம் என்றும் அதற்காக பல்வேறு கட்டங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் நிச்சயம் அவர் 18 கோடத்தில் வெற்றி பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons