கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு, அலுவலகங்களில் அனுமதி இல்லை என, மாநில அரசு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களுக்கு அலுவலகங்களில் அனுமதி இல்லை என்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அந்த வகையில், வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்திலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு அலுவலகங்களில் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அசாம் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஒப்பந்த ஊழியர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகே அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். முழுமையாக தடுப்பூசி போடாத ஊழியர்கள் அலுவலகத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் விடுப்பு அல்லது அசாதாரண விடுப்பு எடுத்துக் கொண்டால், சம்பளம் வழங்கப்படாது.
இதேபோல் தடுப்பூசி போடாத பொது மக்கள் மருத்துவமனைகள் தவிர பொது இடங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். பொது இடங்களுக்குச் செல்லும் அனைத்து தரப்பினரும் முழுமையாக தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons