வரும், 4, 5ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்யும். சென்னை உள்பட மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.நாளை தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் மிதமான மழையும், மற்ற இடங்களில் லேசான மழையும் பெய்யும்.

வரும், 4, 5ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, வந்தவாசியில், 9 செ.மீ., மழை பெய்துள்ளது.

புயல் நிலவரம்

அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் மாறும். வரும் 4ம் தேதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே கரையை நெருங்க வாய்ப்புள்ளது.இதன் காரணமாக, தென் கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளில் இன்றும்; மத்திய வங்கக் கடல், ஆந்திரா, ஒடிசா கடல் பகுதியில் நாளையும், நாளை மறுநாளும் மணிக்கு, 80 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசும்.

எனவே, மீனவர்கள் இந்த நாட்களில், மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இந்த பகுதிகளில் உள்ளவர்கள் விரைவில் கரை திரும்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

‘ரெட் அலெர்ட்!’

வங்கக் கடலில் உருவாகும் புயல் காரணமாக, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா பகுதிகளுக்கு, நாளை மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலெர்ட்’டும், நாளை மறுநாள் ‘ரெட் அலெர்ட்’டும் விடப்பட்டுள்ளது. ஆந்திராவின் காக்கிநாடா, விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், ஒடிசாவின் புரி மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு, இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி துவங்கி புரி வரையிலும் துறைமுகங்களுக்கும் முன்னெச்சரிக்கை அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons