#
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கோட்டையடி கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, மயானத்திற்கு செல்லும் சாலை வசதி என எதுவுமே முறையாக செய்து தரப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இன்று வள்ளியூர் புதிய பேருந்து நிலையத்தை ஆய்வு செய்ய வந்த தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் ஆகியோரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சபாநாயகர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிட மறுத்து தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.