வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்தது போல், நீட் தேர்வையும் ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பி தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். வேளாண் சட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்த மு.க ஸ்டாலின் போராடிய விவசாயிகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார். ஆனால் ஒன்றரை ஆண்டுகளாக திரும்பி பார்க்காமல் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்காமல் இருந்த மத்திய அரசு இன்று வேளாண் சட்டம் தேவையில்லை என்று ரத்து செய்கிறது. பஞ்சாப் உத்தரப் பிரதேச மாநில தேர்தலில் தோல்வி வரும் என்ற அச்சத்தில் ரத்து செய்து இருக்கிறார்கள். இதே போல் தமிழகத்தில் ஒருமித்த குரலாக நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்கிறோம் அதையும் செய்தால் மனதார பாராட்டுவோம் எனவும் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons