நில அபகரிப்பு வழக்கு, திமுக பிரமுகரைத் தாக்கிய கொலை வழக்கு, சாலை மறியல்ஆகிய வழக்குகளில் கைதானஅதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையிலிருந்து விடுதலையானார்.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த மகேஷ் என்பவர்,ரூ. 5 கோடி மதிப்பிலான தன்னுடைய தொழிற்சாலையை அபகரித்ததாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில்சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரைகைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனு நேற்று(மார்ச்-11)விசாரணைக்கு வந்தது. இதில்ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதுடன்இரண்டு வாரங்கள் திருச்சியில் தங்கியிருந்துவாரத்திற்கு மூன்று நாள்கள் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திடவும்நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஏற்கெனவே திமுக பிரமுகரைத் தாக்கிய கொலை வழக்கு, சாலை மறியல் என இரண்டு வழக்கில் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் மூன்றாவது வழக்கிலும் ஜாமீன் பெற்றதால் இன்றுஜெயக்குமார் சிறையில் இருந்து விடுதலையானார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons