*பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வில் முதல்வர் ஒளியேற்றுவாரா* *அமைச்சர் வழிகாட்டுவாரா* ஆசிரியர் மனசு திட்ட விழாவில் பேச்சு! தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் திருச்சியில் உள்ள ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒருங்கிணைபுக்குழுவின் தலைவர் ஜேசுராஜா தலைமை வகித்தார். கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் திருப்பூர் யசோதா வரவேற்றுப் பேசினார். இந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதிலுமிருந்து மாவட்டப் பிரதிநிதிகளாக 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஆசிரியர் மனசுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வில் ஒளியூட்டக்கூடிய ஆட்சி தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் 10 ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களுக்கு இடையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வில் நல்ல வழியும், வருங்காலத்திற்கு ஒளியும் ஏற்றுவார் நம் தமிழக முதல்வர். அதற்கு உரிய வழி செய்வார் நம்  அமைச்சர் என்று பேசினார். மேலும் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை, பிரச்சனைகளை, ஆலோசனைகளை பெறுவதற்கு வாய்ப்பாக ஆசிரியர் மனசுத் திட்டம் என்கிற   வரப்பிரசாதமான ஒரு திட்டத்தை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தி இருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரையும், இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக திகழக்கூடிய தமிழ்நாட்டை வழிநடத்தி வரும் தமிழக முதல்வரையும் நம்பி உங்கள் கவலைகளை தூக்கிப் போடுங்கள். உங்களது பத்தாண்டு கவலைகள் விரைவில் தீரும் எனப் பேசினார். முன்னதாக கூட்டத்தில் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60ஆக உயர்த்தியது பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பொருந்தும்,  விரைவில் பகுதி நேர ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிப்பு செய்த தமிழக முதல்வருக்கும், அதற்கு வழிவகை செய்த பள்ளிக்கல்வி அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக டிசம்பர் மாதம் பகுதி நேர ஆசிரியர்களின் சார்பாக ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து பள்ளிக் கல்வி அமைச்சரைப் பங்கு பெறச் செய்யும் ஏற்பாடுகளை செய்து முடிக்க ஒருங்கிணைப்பு குழு முடிவுசெய்து, அதற்கான மாவட்ட வாரியாக குழுக்களை ஏற்படுத்தி பணிகளை விரைவுபடுத்துவதன் மூலம் பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்திற்கு நம்பிக்கை ஊட்டிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கவும் வாழ்வாரத்தை உறுதி செய்ய கோரிக்கை விடுத்தும் நிகழ்வை சிறப்புற நடத்துவது என முடிவுசெய்து  கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தின் முடிவில் நாகப்பட்டினம் முரளி  நன்றி கூறினார்

பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வில் முதல்வர் ஒளியேற்றுவாரா*
*அமைச்சர் வழிகாட்டுவாரா*
ஆசிரியர் மனசு திட்ட விழாவில் பேச்சு!பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வில் முதல்வர் ஒளியேற்றுவாரா*
*அமைச்சர் வழிகாட்டுவாரா*
ஆசிரியர் மனசு திட்ட விழாவில் பேச்சு!

 

தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் திருச்சியில் உள்ள ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒருங்கிணைபுக்குழுவின் தலைவர் ஜேசுராஜா தலைமை வகித்தார்.
கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் திருப்பூர் யசோதா வரவேற்றுப் பேசினார்.
இந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதிலுமிருந்து மாவட்டப் பிரதிநிதிகளாக 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஆசிரியர் மனசுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வில் ஒளியூட்டக்கூடிய ஆட்சி தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் 10 ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களுக்கு இடையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வில் நல்ல வழியும், வருங்காலத்திற்கு ஒளியும் ஏற்றுவார்
நம் தமிழக முதல்வர். அதற்கு உரிய வழி செய்வார் நம்  அமைச்சர் என்று பேசினார்.

மேலும் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை, பிரச்சனைகளை, ஆலோசனைகளை பெறுவதற்கு வாய்ப்பாக ஆசிரியர் மனசுத் திட்டம் என்கிற   வரப்பிரசாதமான ஒரு திட்டத்தை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தி இருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரையும், இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக திகழக்கூடிய தமிழ்நாட்டை வழிநடத்தி வரும் தமிழக முதல்வரையும் நம்பி உங்கள் கவலைகளை தூக்கிப் போடுங்கள். உங்களது பத்தாண்டு கவலைகள் விரைவில் தீரும் எனப் பேசினார்.

முன்னதாக கூட்டத்தில் ஓய்வு பெறும் வயதை
58ல் இருந்து 60ஆக உயர்த்தியது
பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பொருந்தும்,  விரைவில் பகுதி நேர ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிப்பு செய்த தமிழக முதல்வருக்கும், அதற்கு வழிவகை செய்த பள்ளிக்கல்வி அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக டிசம்பர் மாதம் பகுதி நேர ஆசிரியர்களின் சார்பாக ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து பள்ளிக் கல்வி அமைச்சரைப் பங்கு பெறச் செய்யும் ஏற்பாடுகளை செய்து முடிக்க ஒருங்கிணைப்பு குழு முடிவுசெய்து, அதற்கான மாவட்ட வாரியாக குழுக்களை ஏற்படுத்தி பணிகளை விரைவுபடுத்துவதன் மூலம் பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்திற்கு நம்பிக்கை ஊட்டிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கவும் வாழ்வாரத்தை உறுதி செய்ய கோரிக்கை விடுத்தும் நிகழ்வை சிறப்புற நடத்துவது என முடிவுசெய்து  கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தின் முடிவில் நாகப்பட்டினம் முரளி  நன்றி கூறினார்

 


 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons