தமிழக வெற்றிக் கழக (தவெக) மாநாடு தொடா்பாக 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தவெக முதல் மாநாடு வரும் அக். 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. மாநாட்டுப் பணிகள் கடந்த 4-ஆம் தேதி பந்தல் கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய நிலையில், மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாநாட்டுக்கு வரும் தொண்டா்களுக்கு தேவையான உணவு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரும் பணி தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 27 குழுக்களை அமைத்து சனிக்கிழமை விஜய் உத்தரவிட்டிருந்தாா்.

இந்நிலையில், மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

The short URL of the present article is: https://reportertoday.in/kiui

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons