சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில்
ராஜஸ்தானை சேர்ந்த மாதுராம் (30) என்பவர் வசித்து வந்தார்.மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்த போது மாதுராம் அதே பகுதியில் மளிகை கடை மற்றும் பேன்சி ஸ்டோர் ஒன்றை நடத்தி வருகிறார்

நேற்று நள்ளிரவில் கடையை சுத்தம் செய்யப்போவதாக மனைவியிடம் கூறி மகனுடன் கடைக்கு வந்த மாதுராம் இன்று காலை ஆகியும் வீடு திரும்பாததால் தொலைபேசியில் அழைத்த போது பதிலளிக்கவில்லை.
அதிர்ச்சி அடைந்த மாதுராமின் மனைவி 100 அவசர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மளிகை கடையின் ஷட்டரை உடைத்து பார்த்த போது தந்தை, மகன் ஆகிய இருவரும் தூக்கிட்டு
இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து செங்குன்றம் ஆய்வாளர் புருஷோத்தம்மன் தலைமையில் போலீசார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவரது செல்போனை ஆய்வுகள் மேற்கொண்டனர். கடன் தொல்லை காரணமாக தமது மகனுடன் கடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தை, மகன் ஆகிய இருவர் கடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

The short URL of the present article is: https://reportertoday.in/3m9x

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons