தமிழ்நாட்டிலேயே பெரிய குடும்பம்: குடும்ப அட்டையை பெரிதாக்கிய அதிகாரிகள்*

சென்னை: சென்னையில் ஒரே குடும்ப அட்டையில் 20 நபர்களின் பெயர்கள் இருப்பதாக உணவுப்பொருள் வழங்கல் துறை தரவுகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்தக் குடும்பமே பெரிய குடும்பமாகக் கூறப்படுகிறது.

அந்தப் பெரிய குடும்பத்தின் மூத்த நபரான 89 வயது முன்னாள் அரசு அதிகாரி ஏ.ஆர்.வெங்கடேசன் பேசுகையில், வீட்டில் மொத்தம் 30 நபர்கள் இருப்பதாகவும் அனைவரும் மயிலாப்பூரின் அப்பர்சுவாமி கோவில் தெருவில் இரண்டு மாடி வீட்டில் வசிப்பதாகவும் கூறினார்.

ஓய்வுபெற்ற துணை செயற்பொறியாளரான அவர், குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரையும் ஒரே குடும்ப அட்டையில் சேர்க்க பல சிக்கல்களைக் கடந்து வந்ததாகக் கூறுகிறார்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் அட்டை வழங்கப்பட்டபோது 24 பெயர்கள் இருந்ததாகவும் தற்போது புதிய அட்டையில் 20 பெயர்கள் இருப்பதாகவும் அதில் 8 நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கென குடும்ப அட்டை வடிவமைப்பில் அதிகாரிகள் மாற்றம் செய்துள்ளதாகவும் கூறினார்.

மொத்த குடும்ப உறுப்பினர்களும் ஆறு குடியிருப்புகளைக் கொண்ட ஒரே பெரிய வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்தக் குடும்பத்தை கூட்டுக் குடும்பம் என்று அழைக்காமல் ‘பெரிய குடும்பம்’ என்று அழைக்கச் சொல்கிறார் வெங்கடேசன்.

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons