டெல்லியில் வரும் 1-ம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்கள்  ஆலோசனை* புதுடெல்லி:பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து விட்டது. 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு வரும் ஒன்றாம் தேதி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.இதையடுத்து, ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று மதியம் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி 3-வது தடவையாக ஆட்சி அமைக்க தீவிரமாக உள்ளது. இந்தியா கூட்டணி தலைவர்கள் தாங்கள்தான் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என கூறி வருகிறார்கள். இதனால் மத்தியில் யார் ஆட்சி அமையும் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், வரும் 1-ம் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க, சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஷ்டிரீய லோக்தளம் உள்பட 28 கட்சிகள் உள்ளன. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பது பற்றியும், தேர்தல் முடிவுகளைப் பொறுத்து அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி விவாதித்து முடிவுசெய்ய உள்ளனர். பிரதமர் தேர்வு பற்றியும் இந்தக் கூட்டத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.              🇮🇳 REPORTER TODAY🇮🇳                www.reportertoday.in விரிவான செய்திகளை உடனுக்குடன் பெற  👇 (1) Magazine:👇 #REPORTER_TODAY (2)download PlayStore Mobile App:👇 https://play.google.com/store/apps/details?id=com.reporter.reportertodaytamilnewsapp  (3) Website:👇  www.reportertoday.in   (4) Web TV:👇 #REPORTER_TODAY_TV (5) Whatsapp Channel:👇 https://whatsapp.com/channel/0029Va5yoZN7z4kbmGf6ab1I   (6) YouTube:👇 https://youtube.com/@reportertodaytv896?si=N5ABE5EDKj3rFg5b    (7) Facebook Page:👇 https://www.facebook.com/profile.php?id=100067732053037&mibextid=ZbWKwL    (8) Twitter :👇 https://x.com/REPORTERTO93013?t=cV480ocgk1852SSWitK7sA&s=09   (9) Instagram: 👇  https://www.instagram.com/p/CyOT-_0P8lN/?igshid=NjZiM2M3MzIxNA== தொடர்புக்கு: 📱9962515000 #ரிப்போர்ட்டர்_டுடே #REPORTER_TODAY #ரிப்போர்ட்டர் #டுடே #Reporter  #Today #Trending #followers #Highlights #BJP #CONGRESS #DMK #ADMK #AMMK #MDMK #NTK #VCK #PMK #DMDK #TNGOVT #CMO #TJU #ITWINK #POLITICAL WWW.REPORTERTODAY.IN  தொடர்புக்கு: 📱9962515000

கேரள அரசைக் கண்டித்து பேரணி நடத்திய விவசாயிகள்*

 

கூடலூர்: முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரள அரசைக் கண்டித்து தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான லோயர் கேம்பில் விவசாயிகள் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதி கேட்டு கேரள அரசு கடந்த ஜனவரியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் மனு அளித்தது.

”முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அணையின் கீழ்ப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், வனவிலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

“எனவே, தற்போதுள்ள அணைக்கு 1,200 அடிக்குக் கீழே புதிய அணையை கட்டிய பின், பழைய அணையை இடிக்க அனுமதி வேண்டும்,” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனுவை ஆய்வு செய்த அமைச்சு, அதை நிபுணர் மதிப்பீட்டுக் குழுவுக்கு மே 14ஆம் தேதி அனுப்பியது. இது தொடர்பான கூட்டத்தை மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு செவ்வாய்க்கிழமை (மே 28) நடத்த உள்ளது.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரள அரசைக் கண்டித்து தமிழக விவசாயிகள் திங்கட்கிழமை (மே 27) காலை தமிழக எல்லையான லோயர் கேம்பில் இருந்து முல்லைப் பெரியாறு அணை நோக்கி பேரணியாகக் கிளம்பினர்.

ஆனால், விவசாயிகள் கர்னல் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே வந்தபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

போராட்டம் நடைபெற்ற வேளையில் பெரியாறு வைகை பாசன விவசாயச் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “தற்போது அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் வலியுறுத்தி வரும் வேளையில், கேரளா புது அணை என்பதில் பிடிவாதமாக இருப்பது 152 அடிக்கு முட்டுக்கட்டை போடுவதற்காகத்தான்.

“முல்லைப் பெரியாறு அணையை இடிக்க நினைக்கும் கேரளாவின் கனவு ஒருபோதும் பலிக்காது,” என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons