தமிழக தொழில்துறை சார்பில் வரும் ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த சூழ்நிலையில் பல புதிய தொழில்களை தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழில்களுக்கான விரிவாக்கத்திற்கு அனுமதி கேட்டும் தமிழக அரசுக்கு பல விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து அமைச்சருக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 31-ந் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதற்கு முன்பு சில தொழில்களுக்கான அனுமதியை அமைச்சரவை வழங்க வேண்டியுள்ளது. இந்த கூட்டத்தில் அதற்கான அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons