தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் இன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை தென் மாவட்டங்கள், நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் வேளாங்கண்ணியில் 11 செ.மீ. மழையும், நாகையில் 10 செ.மீ. மழையும், பரங்கிப்பேட்டையில் 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

குமரிக் கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்றும், சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், டெல்டா மாவட்டங்களில் மழையும் குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons