ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

ஆனால் அவர்களின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இதையடுத்து, தலைமறைவான ராஜேந்திர பாலாஜி அவரது உறவினர்கள் உள்பட 4 பேரை தனிப்படைகள் சென்னை, மதுரை ஆகிய மாவட்டங்களில் முகாமிட்டு தேடி வருகின்றன.

இந்நிலையில், போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை போலீஸ் குழு பெங்களூரு விரைந்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons