பெட்ரோல், டீசல் விலை குறையாததால் மாட்டு வண்டியில் பயணிக்க நேர்ந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னையில் வாக்காளர் பெயர் நீக்கம் மற்றும் சேர்த்தல் முகாமை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தன் காரில் சென்ற அவர் திடீரென மாட்டு வண்டியில் பயணித்து மாட்டுக்கார வேலனாக மாறினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநில முதல்வர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் பல்வேறு வகையான நோய்கள் சர்வ சாதாரணமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons