சென்னை சேப்பாக்கம் கிருஷ்ணசாமி தெருவில் வசித்து வருபவர் இளவரசரன்(52). இவர் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் பழம் வாங்குவதற்கு தனது மாருதி மினி வேனில் சென்றுள்ளார்.

கோயம்பேடு பழ மார்க்கெட் அருகே மினிவேனை நிறுத்திவிட்டு இளவரசன் பழம் வாங்குவதற்கு சென்றுள்ளார். அப்பொழுது அவரது மாருதி மினி வேனில் இருந்து புகை கிளம்பி உள்ளது. இதனைக் கவனித்த அங்கு இருந்தவர்கள் இளவரசனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இளவரசன் மினி வேனில் இருந்து வெளியேறும் புகையை அணைக்க முயற்சித்த போது திடீரென மளமளவென தீப்பற்றி எரிந்துள்ளது.

இதைத் தொடர்ந்து கோயம்பேடு தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மினி வேனில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

இருந்தபோதிலும் அதற்குள் மாருதி மினி வேன் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதில் யாருக்கும் தீக்காயம் ஏற்படவில்லை.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons