தேசிய செய்திகள்
அரசியல்
தொழில்நுட்பம்
TRENDING VIDEO
Login
அரசியல்
ஆரோக்கியம்
மருத்துவம்
நாட்டில் முதல் முறையாக சென்னையில் அரசு இலவச செயற்கை கருத்தரிப்பு மையம்
நாட்டில் முதல் முறையாக சென்னையில் அரசு இலவச செயற்கை கருத்தரிப்பு மையம்
நாட்டிலேயே முதல்முறையாக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் ரூ.6.97கோடியில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் – பிரசவ வளாகம் திறக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக கட்டணமின்றி சிகிச்சை அளிக்கும் வகையிலான இந்த வளாகத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.அப்போது அவர்கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு, இந்த கருத்தரித்தல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் மகப்பேறுகளில் தாய்மார்களின் இறப்பு 70-க்கும் மேல் இருந்தது. மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து, அதில்வெற்றியும் கண்டுள்ளது. இதையடுத்து, இறப்பு எண்ணிக்கை 2 ஆண்டுக்கு முன்பு 54, கடந்த ஆண்டு 52, இந்த ஆண்டு 45 எனபடிப்படியாக குறைந்துள்ளது.இந்தியாவில் 25-45 வயது பெண்களிடம் கருத்தரிப்பின்மை பாதிப்பு 3.9 சதவீதம் இருப்பதை உலக சுகாதார மையம்உறுதிப்படுத்தியுள்ளது. உடற்பயிற்சி இல்லாதது, உடல் பருமன், உணவு பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவைதான் இதற்கான காரணங்களாக உள்ளன.அரசு சார்பில் எழும்பூர் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையத்தை தொடங்கி வைத்துள்ளோம். 8 படுக்கைகள் கொண்ட அதிநவீன பிரசவ அறை திறந்து வைக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் கூட இல்லாத அளவுக்கு தரமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் அமைக்கப்பட்டிருப்பது நிச்சயம் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். சண்டிகர், டெல்லி, மகாராஷ்டிரா அரசுமருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் ஏற்கெனவே இருந்தாலும், அங்கு ஒரு கருத்தரிப்பு சுழற்சிக்கு ரூ.2.5 லட்சம் வரை செலவாகும். ஒரு குழந்தை பிறக்க ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை தேவைப்படும்.ஆனால், நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் முழுமையாக இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு அதிநவீன பிரசவஅறை ரூ.89.96 லட்சத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 2-வது செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்குவதற்கான பணி நடந்துவருகிறது. அந்த மையமும் விரைவில் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி
சென்னையை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க 200 நீர் நிலைகளை இணைக்க திட்டம்
சென்னை:சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கை தடுக்கவும், நகரின் நீர் சேமிப்புத் திறனை மேம்படுத்தவும் அடையாறு மற்றும் கோவளம் ஆற்றுப் படுகைகளில் உள்ள 200 நீர் நிலைகளை இணைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகிறது. குறிப்பாக தாம்பரம், முடிச்சூர், ஆதனூர், மண்ணிவாக்கம் பகுதிகளில் போதுமான சேமிப்பு கட்டமைப்புகள் இல்லாததால் 90 சதவீத மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை கருத்தில் கொண்டு ஆங்காங்கே நீர்நிலைகளை தூர்வாரி இணைப்பு கால்வாய்களை உருவாக்கி தண்ணீரை சேமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.அடையாறு படுகையில் 196 குளங்களில் 134, கோவளம் படுகையில் உள்ள 120 குளங்களில் 66 நீர் நிலைகளை கட்அண்ட் கவர் முறையில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை, செங்கல்பட்டு காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள கால்வாய்களை தூர்வாரி அதிகப்படியான தண்ணீரை நீர்நிலைகளுக்கு கொண்டு செல்ல வசதியாக தரைமட்டத்திற்கு கீழே மூடப்பட்ட கட்டமைப்புடன் வடிகால் கட்டப்படும். இவற்றை ஜப்பான் சர்வ தேச கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் செயல்படுத்த திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் தண்ணீர் தேவை ஆண்டுக்கு தற்போது 22 டி.எம்.சி.யாக உள்ளது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் தொழில் துறை விரிவாக்கம் காரணமாக 2030-ம் ஆண்டுக்குள் 28 டி.எம்.சி.யாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய நகரின் நீர்நிலைகளின் சேமிப்புத் திறனை அதிகரிப்பது இன்றியமையாதது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கல்வி
வேளாண், மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6-ந்தேதி ஒரே விண்ணப்பம்
கோவை:தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த கல்வியாண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துக்கும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத் துக்கும் ஒரே விண்ணப்பம்...
மாணவிகளிடம் பாலியல் பேரம் புகார்: பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல்...
பள்ளி குழந்தைகளுக்கு தண்டனை தந்தால் கடும் நடவடிக்கை தேவை: சென்னை ஐகோர்ட்
பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும்,...
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்- 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சென்னையில் வியாழக்கிழமை பதற்றம் நிலவியது. மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு விரைந்தனர். இதனால் பள்ளிகளின் வாயிற்பகுதியில் ஏராளமானோர் குவிந்திருப்பதைக்...
கள்ளக்குறிச்சி சக்தி பள்ளிக் கலவரம் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி ஓரிரு நாட்களில் தீர்வுகாண பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்
கள்ளக்குறிச்சி சக்தி பள்ளிக் கலவரம் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி ஓரிரு நாட்களில் தீர்வுகாண பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்ன சேலம் சக்தி தனியார் பள்ளியில் நடைபெற்ற கலவரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.இது...