இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து காணப்பட்டன. நேற்று முன்தினம் 9,195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நாட்டில் நேற்று 13,154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார துறை தெரிவித்திருந்தது. கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மீண்டும் தொற்று உயர்ந்து உள்ளது.

இந்தியாவில் 91,361 பேர் (நேற்று 82,402 பேர்) சிகிச்சையில் உள்ளனர். 7,585 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இதனால், குணமடைந்தோர் விகிதம் 98.36% ஆக உள்ளது.
கொரோனாவுக்கு 220 பேர் (நேற்று 268 பேர்) உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 4,80,860ல் இருந்து 4,81,080 ஆக உயர்ந்து உள்ளது.

கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த சூழலில், நேற்று 10 ஆயிரம் எண்ணிக்கையை கடந்து பாதிப்புகள் பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்நிலையில், பாதிப்பு எண்ணிக்கை இன்று 15 ஆயிரம் கடந்து உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons