Month: January 2023

*அமைச்சர் உதயநிதி மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் ! -சாட்டையை சுழற்றும் சவுக்கு-*

*அமைச்சர் உதயநிதி மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் ! -சாட்டையை சுழற்றும் சவுக்கு-* உதயநிதி ஸ்டாலின் நடத்தும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்பது முதல்வர் ஸ்டாலினின்…

ஈரோடு:அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணி தொடங்கியது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகரிடம் கேட்டபோது கூறியதாவது:-கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது. த.மா.கா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.இந்த சூழ்நிலையில் இடைத்தேர்தல் வந்துள்ளது. கூட்டணி தர்மபடி தமிழ் மாநில காங்கிரசுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. கூட்டணி பொருத்தவரை தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் அவகாசம் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தலைவர் ஜி.கே.வாசன் முறைப்படி கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவு செய்வார். நாங்கள் தொடர்ந்து அ.தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க.வை பொருத்தவரை அவர்கள் தேர்தல் பணி தொடங்கி விட்டார்கள். கூட்டத்தில்கூட கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று முடிவு செய்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.-த.மா.கா இடையே எந்தஒரு போட்டியோ மோதலோ ஏற்படவில்லை.அ.தி.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ், பாரதி ஜனதா ஆகிய எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பலமான எதிர்கட்சியாக உள்ளது. ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கடந்த 18 மாதமாக பல்வேறு பிரச்சினைகள் மக்கள் சந்தித்து வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.இந்த தேர்தலை பொருத்தவரை நாங்கள் அ.தி.மு.க. தலைமையில் தி.மு.க. அரசின் விரோத போக்கை எடுத்து கூறுவோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இரண்டு தலைவர்கள் கூடி பேசி முடிவு செய்வார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.இதன் மூலம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் த.மா.கா.வும் போட்டியிட தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் இப்போதே தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, நேற்று முதல் நாளில் சென்னையிலிருந்து1.34 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக, 16 ஆயிரத்து 932 பேருந்துகள் நேற்று (ஜன. 12) முதல் இயக்கப்படுகின்றன. சென்னை, கோவை, திருப்பூர், சேலம் போன்ற தொழில் நகரங்களில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களுக்கு ஜன.12 முதல் 14-ஆம் தேதி வரையும், ஜன.16 முதல் 18-ஆம் தேதி வரையும் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் நாளில்சென்னையிலிருந்து1.34 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது. நேற்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 586 பேருந்துகள் என மொத்தம் 2,686 பேருந்துகளில் 1,34,300 பேர் பயணித்துள்ளனர்.

கடந்த 6 ஆம் தேதி சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் பாஜக மாவட்ட துணை தலைவர் ரவி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள தனியார் மஹாலில் கடந்த 6 ஆம் தேதி பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதில் முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுந்தரத்தின் ஆதரவாளர் ரவி மற்றும் புதிய மாவட்ட தலைவர் அருள் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி இருதரப்பினரிடையே கைகலப்பாக மாறியதில் பாஜக நிர்வாகிகள்ஒருவருக்கொருவர் நாற்காலிகளை வீசி தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்ட துணை தலைவர் ஆரூர் ரவி கட்சியின் கட்டுப்பாட்டை மீறியுள்ளார். கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதனால் அவர் பொறுப்பில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார்” என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ராகுலின் பாதயாத்திரை நிறைவு விழாவில், முதல்வர் ஸ்டாலின் உட்பட, 21 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில், பிரதமர் வேட்பாளராக ராகுல் பெயரை, முதல்வர் ஸ்டாலின் வாயிலாக முன்மொழிய வைக்க, காங்., மேலிடம் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. காங்., முன்னாள் தலைவர் ராகுல், கடந்த செப்.,7ல், கன்னியாகுமரியில் நாடு தழுவிய நடைபயணத்தை துவக்கினார். நடைபயணத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, ம.பி., ராஜஸ்தான், டில்லி, உ.பி., அரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக, யாத்திரை தற்போது பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றுள்ளது. இதுவரை, 3,300 கி.மீ.,க்கு மேல் நடைபயணத்தை ராகுல் மேற்கொண்டுள்ளார். காஷ்மீரில் இம்மாதம், 30ம் தேதி நடைபயணம் நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவில், ராகுல் தேசிய கொடி ஏற்றி வைக்கிறார். நிறைவு விழாவில் பங்கேற்குமாறு, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்; ஒருமித்த கருத்து கொண்ட, 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கடிதம் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார். ஆம் ஆத்மி, ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர்., காங்., உள்ளிட்ட சில கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை. தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக காங்., நிர்வாகிகள் கூறியாதாவது: பிரதமர் வேட்பாளராக ராகுல் பெயரை முதல்வர் ஸ்டாலின், காஷ்மீரில் முன்மொழிந்தால், தேசிய அளவில் கன்னியாகுமரி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தும். ராகுலை டில்லி மேலிட தலைவர்கள் சிலர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, பிரதமர் வேட்பாளர் அறிவிப்பை வெளியிட வைக்கும் வகையில் பேச்சு நடத்த உள்ளனர். ‘ராகுல் நடைபயணம் தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளது; காங்கிரஸ் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது’ என்றெல்லாம் முதல்வர் ஸ்டாலின் பாராட்டி பேசியுள்ளார். அவர், பிரதமர் வேட்பாளராக ராகுல் பெயரை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. தற்போதைய சூழலில், ராகுலை பிரதமர் வேட்பாளர்களை அறிவிப்பதை முதல்வர் ஸ்டாலின் தவிர்ப்பார் என்றால், அவருக்கு பதிலாக, துணை பொதுச் செயலர் கனிமொழியை அனுப்பி வைக்க வாய்ப்பு உள்ளது. காங்கிரசை கூட்டணியில் இருந்து ‘கழற்றி’ விட வேண்டும் என்பதற்காகவே, கவர்னர் வாயிலாக, தமிழக அரசுக்கு நெருக்கடி அளிக்கப்படுகிறது. இருப்பினும், கூட்டணி தர்மத்தை மதிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் நல்ல முடிவு எடுப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர். – நமது நிருபர் – Better luck next time.. வடக்கன் ஹிந்திக்காரன் பனி பூரி பீட தான் வருங்கால பிரதமரா ?? …ஏன் ஒரு தமிழனை வருங்கால பிரதமர் என்று அறிவிக்க கூடாதா ??….தமிழனுக்கு அந்த தகுதியில்லையா ??…தமிழன் என்ன இளிச்சவாயனா?? ??…..இந்தியாவிலேயே முதல் மாநிலம் …இந்தியாவுக்கே சோறு போடும் மாநிலம் …ஆனால் வருங்கால பிரதமர் என்று திராவிடன் ஹிந்திக்காரனை அறிவிக்கனுமா .??.. ஐயகோ தமிழகமே ! சொல்ல சொல்லுங்க சார். போன தடவையும் இவர் மட்டும்தான் சொன்னார். அப்படியே இந்த முறையும் 325 சீட்டுகள் கிடைக்க வழிவகை செய்யும். அதே சமயத்தில் பகுத்தறிவு கட்சிக்கும் இங்கே அமோக வெற்றி கிடைக்கும். ஏம்பா நீங்க நடத்துற காமடிக்கு அளவே இல்லையா? கட்சி தலைவருக்கு ஒத்துவராத ஆளை நாட்டின் பிரமதராக என்ன தகுதி உள்ளது. ராகுலுக்கு கனவு காண தகுதி உள்ளது.

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான இரட்டை பதவி வழக்கு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட்

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான இரட்டை பதவி வழக்கு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் சென்னை:ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராக உள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஆதாயம் தரும்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டிச. 12 முதல் 14ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனையொட்டி சென்னையில் 6 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் சிரமமின்றி…

WhatsApp & Call Buttons